search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட மாநில வாலிபர் பலி"

    • ஆணின் உடல் கிடப்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் காசிபாளையம் இந்திரா நகர் காலனி வழியாக கீழ்பவானி வாய்க்காலின் கிளை கொப்பு வாய்க்கால் கோபி-சத்தி மெயின் ரோட்டை கடந்து செல்லும் பகுதியில் அமைந்து ள்ள பாலத்தின் அடியில் ஒரு ஆணின் உடல் கிடப்பதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெ க்டர் மோகனன் தலைமை யிலான போலீசார் சென்று பார்த்தனர். இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் தெரிய வருகிறது.

    இதையடுத்து போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்தவரின் உடலில் காயங்கள் ஏதுமில்லை. பின்னந்தலையில் மட்டும் கீழே விழுந்த போது ஏற்பட்ட காயத்தால் ரத்த கசிவுள்ளது.

    மேற்படி இடத்தில் மது அருந்தும் நபர்கள் அமர்ந்து மது அருந்துவது வழக்கமாக இருந்து வருவதாக தெரிகிறது.அதில் மேற்படி இறந்த நபரும் மது போதையில் கொப்பு வாய்க்காலில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய வருகிறது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நரேஷ் சிங் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • கிணற்றில் 40 அடி ஆளத்துக்கு தண்ணீர் இருந்தது.

    கோவை,

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நரேஷ் சிங் (வயது 25). இவர் கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். பின்னர் நரேஷ் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய படி வெளியே சென்றார். அப்போது இருட்டில் 100 அடி ஆள கிணற்றில் நிலைதடுமாறி உள்ளே விழுந்தார். கிணற்றில் 40 அடி ஆளத்துக்கு தண்ணீர் இருந்தது. நரேஷ் சிங்கிற்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    மறுநாள் காலையில் அவரை அவரது நண்பர்கள் தேடினர். அப்போது நரேஷ் சிங் கிணற்றில் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த நரேஷ் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று பிகாஸ் போக்தாவை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது.
    • சிறிது நேரத்தில் பிகாஸ் போக்தாவுக்கு வலது கை முழுவதும் வலி ஏற்பட்டு வீங்கி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு, டிச. 6-

    ஒடிசா மாநிலம் பவாத் மாவட்டம் தாமோதர்பூர் பகுதியை சேர்ந்தவர் பிகாஸ் போக்தா (20).

    இவர் ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டை அடுத்த எம்.எஸ்.மங்கலம் கிராமத்தில் வாவி காட்டு வலசு பிரிவில் உள்ள ஒரு தனியார் மில்லி தங்கி 5 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பிகாஸ் போக்தாவை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது.

    இதனையடுத்து அவர் போன் மூலம் தனது அண்ணன் தரணி போக்தாவுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் பிகாஸ் போக்தாவுக்கு வலது கை முழுவதும் வலி ஏற்பட்டு வீங்கி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    உடனடி யாக அவரது அண்ணன் தம்பியை மீட்டு சிகிச்சைக்காக கொல்லம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு பிகாஸ் போக்தா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவையில் போர்வெல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வட மாநில வாலிபர் மீது போர்வேல் ராடு மார்பில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் செனட் பாகல் (வயது 21). இவர் கோவை ராமநாதபுரத்தில் தங்கி இருந்து அங்குள்ள போர்வெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் காருண்யா நகர் பெருமாள்கோவில் பதியில் உள்ள ஒரு தோட்டத்தில் போர் போடும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். 

    அப்போது எதிர்பாராத விதமாக போர்வெல் இரும்பு ராடு கழன்று செனட்பாகல் மார்பில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக செனட் பாகலை மீட்டு ஆலாந்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே செனட்பாகல் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×